logo
தில்லி விவசாயிகளுக்கு ஆதரவான விவசாயிகளின் 3 நாள் போராட்டம் நிறைவு

தில்லி விவசாயிகளுக்கு ஆதரவான விவசாயிகளின் 3 நாள் போராட்டம் நிறைவு

17/Dec/2020 08:22:59

புதுக்கோட்டை: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு விவசாய சங்கங்களால் கடந்த 14- ஆம் தேதி தொடங்கப்பட்ட காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை மாலையில் நிறைவடைந்தது

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மூன்றாம் நாளாக புதன்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது 

கூட்டமைப்பின் ஒருங்லெணப்புக் குழுத் தலைவர்கள் எஸ்சி, சோமையா, ஏ. ராமையன் ராஜாங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். மதிமுக சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் மாவட்டச் செயலர் செயலர் மு. மாதவன் விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் சாமி நடராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். கடந்த 14ஆம் தேதி தொடங்கிய இந்தக் காத்திருப்புப் போராட்டட மூன்றாம் நாளான புதன்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.


Top