13/Dec/2020 07:21:01
புதுக்கோட்டையில் கிருத்திகா மண்டல வேதபாராயணம் மாவட்ட பிராமணர் சங்கதலைவர் ஸ்ரீ மஞ்சுநாதன் தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை கீழ 3-ஆம் வீதி ஸ்ரீ என் .கோபாலகிருஷ்ணன் சர்மா முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றார் நிகழ்வில் காஞ்சி ஸ்ரீ பிரம்மசாரியான் ,வேதவ்யாஸ மாஹரிஷிக்கும் கலசத்தில் ஆவாஹனம் பூஜைகள், ருத்திராதிரிஷாதி அர்ச்சனை செய்யப்பட்டது .
ஸ்ரீராமனை பற்றியும் பாடலில் செல்வன் ஆர் . மலையப்பன் எடுத்துரைத்தார். கணபதி,ராமச்சந்திரன்,கோபிகிருஷ்ணன் அனந்தநாராயணன், ஸ்ம்ஹிதையில் ஸ்ரீருத்திரம்,சமகமும் 27 நட்சத்திரங்களுரிய அஷ்ட்ட வாக்கியம் ஸ்ஹசுத்தமாக ஜெபம் செய்தனர்..நிறைவாக பக்தகோடிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கணபதி,ரகுநாதன் , மலையப்பன், அனந்தநாராயணன், ஹரிகிருஷ்ணன், மற்றும் பிராமணர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.ஜெயலட்சுமி ரகுநாதன் நன்றி கூறினார்.