logo
புதுக்கோட்டையில்  கிருத்திகா வேதபாராயணம்

புதுக்கோட்டையில் கிருத்திகா வேதபாராயணம்

13/Dec/2020 07:21:01

புதுக்கோட்டையில் கிருத்திகா மண்டல  வேதபாராயணம்  மாவட்ட பிராமணர் சங்கதலைவர் ஸ்ரீ மஞ்சுநாதன்  தலைமையில்   நடைபெற்றது.

 புதுக்கோட்டை     கீழ 3-ஆம் வீதி    ஸ்ரீ என் .கோபாலகிருஷ்ணன் சர்மா முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றார்    நிகழ்வில் காஞ்சி ஸ்ரீ பிரம்மசாரியான் ,வேதவ்யாஸ மாஹரிஷிக்கும் கலசத்தில் ஆவாஹனம்  பூஜைகள், ருத்திராதிரிஷாதி அர்ச்சனை செய்யப்பட்டது . 

ஸ்ரீராமனை   பற்றியும் பாடலில் செல்வன் ஆர் . மலையப்பன்   எடுத்துரைத்தார். கணபதி,ராமச்சந்திரன்,கோபிகிருஷ்ணன் அனந்தநாராயணன், ஸ்ம்ஹிதையில் ஸ்ரீருத்திரம்,சமகமும்  27 நட்சத்திரங்களுரிய அஷ்ட்ட வாக்கியம் ஸ்ஹசுத்தமாக ஜெபம் செய்தனர்..நிறைவாக  பக்தகோடிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கணபதி,ரகுநாதன் , மலையப்பன், அனந்தநாராயணன், ஹரிகிருஷ்ணன், மற்றும்  பிராமணர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.ஜெயலட்சுமி ரகுநாதன்   நன்றி கூறினார்.

Top