04/Jun/2021 08:52:26
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் சீரான மின்விநியோகம் கிடைக்க புதிய மின்மாற்றி அமைக்க எம்எல்ஏ-நடவடிக்கை எடுத்ததற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
கறம்பக்குடி பகுதியில் உரிய அழுத்தத்தில் மின்சாரம் கிடைக்கவில்லை என்று புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜாவிடம் தொலைபேசி வாயிலாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கறம்பக்குடி சென்று மின்வாரிய அலுவலகத்துக்குச்சென்று ஆய்வு செய்து பிரச்னையை கேட்டறிந்தார்.
அப்போது மின்வாரிய அதிகாரிகள் இப்பிரச்னைக்கு
தீர்வு காண 16 மெகாவாட் மின்மாற்றி அமைத்தால் தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்ய
முடியும் என விளக்கமளித்தனர். அங்கிருந்தபடியே மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியைதொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரச்னைக்கூறி 16 மெகாவாட் மின் மாற்றி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
இந்தக் கோரிக்கையை ஏற்று மின்துறை அமைச்சரின் உத்தரவுப்படி 16 மெகாவாட் மின் மாற்றி கறம்பக்குடிக்கு லாரி மூலம் வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டது. இந்த மின்மாற்றி நிறுவப்பட்டவுடன் கறம்பக்குடி பகுதிக்கு சீரான மின்சாரம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரச்னையைத் தீர்க்க துரித நடவடிக்கை எடுத்த புதுக்கோட்டை எம்எல்ஏ- டாக்டர் முத்து ராஜாவுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.