12/Dec/2020 09:58:16
ஈரோடு- டிச: அதிமுக இளைஞர்-இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் ஈரோடு பெரியார் நகரில் சனிக்கிழமை நடந்தது.
கூட்டத்துக்கு அதிமுக. பகுதி செயலாளர் ரா.மனோகரன் தலைமை வகித்தார். எம்எல்.ஏ-க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
அப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், கட்சியில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்த்தல் உள்ளிட்ட பணிகளில் இளைஞர்-இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் கேட்டுக்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து புதிதாக சேர்ந்துள்ள இளைஞர்- இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதில் பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, ஜெகதீஷ், மாநகர் பிரதிநிதி ஆஜம், பெரியார் நகர் பகுதி அவைத்தலைவர் மீன்ராஜா, அரசு வக்கீல் துரைசக்திவேல், கோல்டு சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.