logo
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகாவில்  2 கிராமங்களை தத்தெடுத்து உதவி செய்யும் வெளிநாடு வாழ் தமிழர்கள்..

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகாவில் 2 கிராமங்களை தத்தெடுத்து உதவி செய்யும் வெளிநாடு வாழ் தமிழர்கள்..

27/May/2021 09:39:57

புதுக்கோட்டை,மே: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதிக்குள்பட்ட இலுப்பூர் தாலுகாவைச் சேர்ந்த பொத்தையம்பட்டி மற்றும் வெள்ளியங்குடி  கிராமங்களை வெளி நாடுவாழ்   இலுப்பூரைச் சேர்ந்த தமிழர்கள்  தத்தெடுத்து உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இலுப்பூரை பூர்விகமாக கொண்டு தற்பொழுது கேமன்தீவில் வசித்து வரும் பிரகாஷ்கஸ்தூரி ரங்கன்,சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் வசித்து வரும் கணேஷ்ராஜ் ஆகியோர் தங்கள் பிறந்த ஊரான இலுப்பூரை சுற்றியுள்ள இரண்டு  கிராமங்களை கொரோனா காலத்தில் தத் தெடுத்து  அத்தியாவசிய பொருட்களை வழங்க முடிவு செய்து  இலுப்பூர் தாலுகாவைச் சேர்ந் த பொத்தையம்பட்டி மற்றும் வெள்ளியங்குடி கிராமத்தை தத்தெடுத்தனர்.


பின்னர் அந்த கிராம மக்களுக்கு கொரோனா  பேரிடர்  நீங்கும்  வரை அவர்களுக்கு தேவை யான 5 கிலோ அரிசி பை,4 கிலோ  காய்கறிகள், சமையல் எண்ணெய் ,முகக் கவசங்கள் உட் பட 12 வகையான பொருட்களை  விநியோகம் செய்வதென திட்டமிட்டனர். அதில்,  முதல் கட்டமாக புதன்கிழமை 120  குடும்பங்களுக்கு ரூ.1 இலட்சம் மதிப்பிலான  பொருட்களை அரசின் வழிகாட்டுதலின் படி சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வழங்கினர்.


இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிராமநிர்வாக அலுவலர் முனீஸ்வரன்,பொறியாளர் இடையப்பட்டு ப.தமிழழகன் மற்றும் இடையப்பட்டி கிராம முக்கிய பிரமுகர்கள்  கலந்து கொண்டனர்.  ஏற்பாட்டை வெளிநாடு வாழ் தமிழர் இலண்டன் பிரகாஷ் தியாகராஜன் செய்திருந்தார். சமூக சேவகர் முரளிதரன் கிருஷ்ணமூர்த்தி ,ஆசிரியர் ஆனந்த்குமார் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து சமூக சேவகர் முரளிதரன் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்: வெளிநாட்டில் வாழும் என் நண்பர்கள் பிரகாஷ்கஸ்தூரிரங்கன்,கணேஷ்ராஜ் ஆகியோர் தாங்கள் பிறந்து வளர்ந்த இலுப்பூர் பகுதி மக்களுக்கு உதவிகள் செய்ய நினைத்தனர்.

அதன்படி  இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு ரூ 3 இலட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகர ணங்களை வழங்கினர். தற்பொழுது பொத்தையம்பட்டி,வெள்ளியங்குடி ஆகிய இரண்டு கிராமங்களில்  உள்ள 120 குடும்பங்களை  தத்தெடுத்து ரூ 1 லட்சம்  மதிப்பில் 12 வகையான அத்தியாவசிய பொருட்களை  கொரோனா காலம்  முடியும் வரை  வழங்க முடிவு செய்துள் ளனர் என்றார். 

Top