logo
குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம்- முதல்வர் அறிவிப்பு:

குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம்- முதல்வர் அறிவிப்பு:

24/Mar/2020 11:50:41

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், ரேசன் கார்டுதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் இன்று மாலை முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் 144 தடை உத்தரவால் பல்வேறு தரப்பட்ட தொழில்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள், இதனைக் கருத்தில் கொண்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்றும், ரேசன் கடைகளில் விலையில்லா அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி சட்டசபையில் அறிவித்துள்ளார்நிவாரண உதவி மற்றும் பொருட்களை பெறுவதற்காக ரேசன் கடைகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்கன் முறையில் விநியோகம் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் நடைபாதை வியாபாரிகளுக்கு பொது நிவாரண நிதி 1000 மற்றும் கூடுதலாக 1000 நிவாரணம் வழங்கப்படும் என்றும், கட்ட தொழிலாளர்கள், ஓட்டுநர் தொழில் சார்ந்தவர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.3250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

 

 

 

Top