logo
 முன்னாள் படைவீரர் கொடி நாள்:  மக்கள் நீதி மய்யம் சார்பில்   ரூ.1 லட்சம் நன்கொடை

முன்னாள் படைவீரர் கொடி நாள்: மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.1 லட்சம் நன்கொடை

08/Dec/2020 06:43:24

சென்னை: நமது தாய் திருநாட்டின் இறையாண்மையினை காத்திடும் உயரிய சேவையில் தங்களை ஈடுபடுத்தி கொண்ட முப்படை வீரர்களின் மாபெரும் தியாக உணர்வுக்கு நாம் நன்றிக்கடன் செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7–ஆம் நாளை படைவீரர் கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது.  இந்த நாளில் படைக்களத்தில் விழுப்புண்களை ஏற்று, தமது இன்னுயிரை ஈந்த எண்ணற்ற படைவீரர்களது தியாகத்தையும், சேவையையும்  மனதார போற்றுகின்ற நாளாக கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் நிறுவனர், நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில், நம் தேசத்தின் எல்லைகளைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் கொடிநாள் நிதியாக மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ரூ.1,00,000 - காசோலை வழங்கினேன். வீரரைப் போற்றுதும் விவசாயியைப் போற்றுதும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 


Top