19/May/2021 07:44:01
புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை மற்றும் புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்
ஆய்வின்போது, அமைச்சரிடம் மகப்பேறு மருத்துவமனை கட்டிடம்
வேண்டும் என்ற கோரிக்கையை கந்தர்வகோட்டை அரசு
தலைமை மருத்துவர் ராதிகா முன் வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ரகுபதி மூன்று அடுக்கு கட்டிடம் கட்டுவதற்கு தேவையான
மதிப்பீடு அறிக்கையை அனுப்பி வைக்குமாறு மருத்துவரிடம்
கேட்டுக்கொண்டார்.
உடன் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்ட
மருத்துவ இணை இயக்குனர் ராமு புதுக்கோட்டை மாவட்ட துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் ,கந்தர்வகோட்டை அரசு தலைமை மருத்துவர் ராதிகா கந்தர்வகோட்டை தாசில்தார்
புவியரசன் விஏஓ அரங்க வீரபாண்டியன் கந்தர்வக்கோட்டை
காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கேகே
செல்லபாண்டியன் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.