logo
சர்க்கரை குடும்ப அட்டையை அரிசி குடும்ப அட்டையாக மாற்றலாம்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்

சர்க்கரை குடும்ப அட்டையை அரிசி குடும்ப அட்டையாக மாற்றலாம்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்

07/Dec/2020 05:51:37

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சர்க்கரை குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்கள்  தங்களது  குடும்ப அட்டைகளை அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு   உத்தரவிட்டுள்ளது.  அதன் அடிப்படையில், சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்வதற்கு  இந்த மாதம்  20- ஆம்  தேதிக்குள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது பொது விநியோகத் திட்டத்தில் நடைமுறையில் உள்ள 2,300 சர்க்கரை அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்புவோர்அதற்கான விண்ணப்பங்களை  www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியிலோ அல்லது  சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் புதுக்கோட்டை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடமோ 20.12.2020 தேதிக்குள்  சமர்ப்பிக்கலாம். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் உடன் பரிசீலிக்கப்பட்டு,தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

Top