logo
கையிருப்பு இல்லாததால் ஈரோட்டில் தொடர்ந்து 2 -வது நாளாக தடுப்பூசி முகாம் ரத்து

கையிருப்பு இல்லாததால் ஈரோட்டில் தொடர்ந்து 2 -வது நாளாக தடுப்பூசி முகாம் ரத்து

25/Jul/2021 11:40:42

ஈரோடு, ஜூலை: கையிருப்பு இல்லாததால் ஈரோடு மாவட்டத்தில்  தொடர்ந்து 2 -ஆவது நாளாக தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்திஅடைந்துள்ளது.

ஈரோட்டில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் இது வரை 5 லட்சத்து 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையிலும், சிரமமின்றி தடுப்பூசி போடுவதற்காகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 24- ஆம்  தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.  தடுப்பூசிகள் கையிருப்பு தகுந்தார் போல் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது. 

இந்நிலையில், மாவட்டம் முழுவதும் கடந்த 23-ஆம் தேதி 19 ஆயிரம் பேருக்கு கோவிஷில்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடப்படவில்லை. கடந்த  2- நாள்களாக தடுப்பூசி போடும் பணி ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவேக்சின் 2 - ஆம் தவணை தடுப்பூசிக்காக ஏராளமானோர் காத்திருக்கும் நிலை நீடிக்கிறது.

Top