logo
புதுகை அருகே பிறந்தநாள் கொண்டாடிய 105 வயது மூதாட்டி.

புதுகை அருகே பிறந்தநாள் கொண்டாடிய 105 வயது மூதாட்டி.

06/Dec/2020 08:43:27

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே 4 தலைமுறை குடும்பத்தினருடன் ஒன்றுகூடி  105 வயது மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை பிறந்தநாள் கொண்டாடினார்.

  புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் ஜீவா நகரைச் சேர்ந்தவர் துரைச்சாமி மனைவி பொன்னம்மாள் (105). இவர்களுக்கு, மூன்று மகன்கள் உள்ளனர். பொன்னம்மாள், கணவருடன் சேர்ந்து, குழந்தைகளையும் படிக்க வைத்து திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வயது முதிர்வின் காரணாமக துரைச்சாமி இறந்துவிட்டார். இதனால், மனம் தளராத பொன்னம்மாள், தன் மகன்களின் விவசாய தோட்டத்திற்கு சென்று விவசாய வேலைகளை செய்து கொடுத்து வந்தார். இன்றும், தன் தேவைகளை, அவரே பூர்த்தி செய்து கொள்கிறார். நான்கு தலைமுறை கண்ட பொன்னம்மாளுக்கு, தற்போது பேரன், பேத்தி, கொள்ளு பேரன், பேத்தி, எள்ளு பேரன் உள்பட 20க்கும் மேற்பட்ட பேரன், பேத்திகள் உள்ளனர். இந்நிலையில், 105வது பிறந்த நாள் கண்ட பொன்னம்மாளுக்கு, வெகுவிமரிசையாக விழா நடத்த, குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக அழைப்பிதல் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நேற்று குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் ஒன்று கூடி கறி விருந்து வைத்து பாட்டிக்கு வாழ்த்து கூறி, ஆசிர்வாதம் பெற்றனர்.


 


Top