13/Jun/2021 10:49:54
சென்னை, ஜூன்: சென்னை பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சார்பில் நிவாரணப் பொருட்களான 10 கிலோ பொன்னி அரிசி மற்றும் 20 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய 250 தொகுப்புகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
நிவாரண உதவிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு பத்திரிகையாளர்கள் 250 பேருக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை பத்திரிகையாளர் மன்ற இணை செயலாளர் பாரதி
தமிழன், இந்திய உழைக்கும் பத்திரிகை சம்மேளன
தேசிய செயலாளர் கா.அசுதுல்லா, மூத்த
பத்திரிகையாளர் நூருல்லா
ஆகியோர் கலந்து கொண்டனர்.