logo
 தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ. 1.59 லட்சம் கோடி கடனில் இருப்பதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ. 1.59 லட்சம் கோடி கடனில் இருப்பதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

23/Jun/2021 04:14:49

சென்னை, ஜூன்:தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நேற்றுமுதல் நடைபெற்று வருகின்றது. இரண்டாம் நாள் கூட்டத்தில்  மின்சாரத்துறை அமைச்சர் பேசுகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் ரூ. 1.59 லட்சம் கோடியாக உள்ளது.

இந்த கடனுக்காக ஆண்டுதோறும் வட்டி மட்டும் ரூ. 13 ஆயிரம் கோடிகட்டப்பட்டு வந்துள்ளனர். திமுக அரசு பொறுப்பேற்றதும் ஆண்டின் வட்டி தொகையில் ரூ. 2 ஆயிரம் கோடி குறைக்கப் பட்டுள்ளது எனத் தெரிவித்தார். ஆளுநர் உரையுடன் தொடங்கிய புதிய பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24 -ஆம் தேதி (வியாழக்கிழமை)  வரை நடைபெறுகிறது.

Top