logo
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள்: சிலட்டூரில் அதிமுகவினர்  அஞ்சலி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள்: சிலட்டூரில் அதிமுகவினர் அஞ்சலி

05/Dec/2020 08:29:27

அறந்தாங்கி அருகே சிலட்டூரில்  அதிமுக. சார்பில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

 நிகழ்ச்சிக்கு, வடக்கு ஒன்றிய செயலாளர் வேலாயுதம் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார்.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில், நிர்வாகிகள் குமரேசன், மதியழகன், முருகானந்தம் ,தர்ம சேகரன், சிவநாதன், ஜோதிபாசு, பிரகாஷ், வழக்குரைஞர் ராஜசேகர், ஆத்மநாதன், சந்திரன், கலைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Top