logo
மருத்துவப் படிப்பிற்குத் தேர்வான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு: சிபிஎம் பாராட்டு

மருத்துவப் படிப்பிற்குத் தேர்வான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு: சிபிஎம் பாராட்டு

29/Nov/2020 06:06:34

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டாரப் பகுதியிலிருந்து நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவப் படிப்பிற்குத் தேர்வான அரசுப் பள்ளி மாணவர்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.


மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 11 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கீரமங்கலம் அரசு பெண்கள் பள்ளியில் இருந்து திவ்யா, தாரணிகா, ஜீவிகா, பிரசன்னா, கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஹரிஹரன், மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஆர்.காயத்திரி  என 6 பேர் ஆலங்குடி வட்டாரப் பகுதிகளில் இருந்து மருத்துவப் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டனர்.


மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பான மதிபெண்கள் எடுத்ததோடு, நீட் தேர்விலும் வெற்றி பெற்று மருத்துவப் படிப்புக்கு தேர்வான மாணவ. முhணவிகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சிகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், போக்குவரத்து இடைக்கமிட்டி செயலாளர் எம்.தரணிமுத்துக்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் என்.தமிழரசன், விமல்துரை, வி.மாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Top