05/Dec/2020 08:19:16
ஈரோடு: தில்லியில் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோட்டில் திமுக சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேளாண் விளை பொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தில்லியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கு ஆதரவாக ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஈரோடு ஆணைக்கல்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு,ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார், வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் சந்திர குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் எல்லபாளையம் சிவக்குமார், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.