logo
கொரோனா தடுப்பூசி அடுத்த வாரம் முதல் கிடைக்கும்: பிரிட்டன் மக்கள் மகிழ்ச்சி

கொரோனா தடுப்பூசி அடுத்த வாரம் முதல் கிடைக்கும்: பிரிட்டன் மக்கள் மகிழ்ச்சி

03/Dec/2020 01:02:27

அமெரிக்கா: உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், 200 -க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.

பல நாடுகள் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து விடுபட்டாலும், இரண்டாம் அலை பரவலாம் என்ற அச்சமும் நிலை வருகிறது. கொரோனா வைரஸ் நோயை கட்டுக்குள் வைக்க கொரோனா தடுப்பூசிகள் கண்டிக்கும் முயற்சியில் பல நாடுகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. உலகம் முழுவதும் 64,214,176 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,487,087 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பைசர் – பயோடெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஒப்புதலை தொடர்ந்து அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி பிரிட்டனில் கிடைக்கும் எனவும் பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.



Top