logo
பெண்களுக்கெதிரான வன்கொடுமை தடுப்பு சர்வதேச தினம்

பெண்களுக்கெதிரான வன்கொடுமை தடுப்பு சர்வதேச தினம்

29/Nov/2020 04:47:58

புதுக்கோட்டை:  நேரு யுவ கேந்திரா சார்பில் பெண்களுக்கெதிரான வன்கொடுமை தடுப்பிற்கான சர்வதேச தினம்   தமிழ்நாடு அறிவியல் இயக்க வளாகத்தில் நடைபெற்றது.  

விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் ஜோயல் பிரபாகர் தலைமை வகித்தார்.  திருமயம் ஒன்றிய தேசிய இளையோர் தொண்டர் தினேஷ் அனைவரையும் வரவேற்றார். 

நேரு யுவ கேந்திரா கணக்காளர் ஆர். நமச்சிவாயம் விழா நோக்கவுரை ஆற்றினார்.  பெண்மையைப்; போற்றுவோம் என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர்  கே. சதாசிவம் சிறப்புரை ஆற்றினார்.  விடிவள்ளி அறக்கட்டளை நிறுவனர்  மலர்விழி வாழ்த்துரை வழங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த சுமார் 50 இளையோர் மற்றும் இளம்பெண்கள் பங்கேற்றனர்.  நிறைவாக மணமேல்குடி தேசிய இளையோர் தொண்டர் சிவபாலன் நன்றி கூறினார். 


Top