logo
புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 10 பேர் காயம்

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 10 பேர் காயம்

30/Jan/2021 10:04:20

புதுக்கோட்டை, ஜன:புதுக்கோட்டை மாவட்டம் மலையக்கோயிலில் நடைபெற்ற  ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்க முயன்ற வீரக்கள் 10 பேர் காயமடைந்தனர்.

 தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு  புதுக்கோட்டை மாவட்டத்தில் மலைய கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி  நடைபெற்றது.

இந்தப் போட்டியில் புதுக்கோட்டை திருச்சி திண்டுக்கல் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 375  -க்கும்  மேற்பட்ட காளைகள் பங்கு பெற்றன. வாடிவாசலில் இருந்து அறுத்து விடப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வீரர்களைப் பிடியில் சிக்காமல் வீரர்களை திணறடித்தது.

அதேபோன்று அடங்க மறுக்கும் காளைகளை வீரர்கள் அடக்க முயற்சி செய்தனர். போட்டியில் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு வீரர்கள் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

காளைகளை அடக்க 220 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு களத்தில் அனுமதிக்கப் பட்டனர் இதில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந் தனர். முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.


Top