logo
ஈரோடு மாவட்டத்தில் 2 -வது நாளாக பரவலாக மழை

ஈரோடு மாவட்டத்தில் 2 -வது நாளாக பரவலாக மழை

27/Nov/2020 04:57:42

ஈரோடு: நிவர் புயல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில்  நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை விடிய விடிய சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. வானங்கள் கருமேகத்துடன் காணப்பட்டது. ஈரோடு ,கவுந்தம்பாடி ,கோபி, பெருந்துறை, வரட்டுப்பள்ளம் போன்ற பகுதிகளில் சாரல் மழை பெய்தது. வெயிலின் தாக்கம் இல்லாமல் வானம் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு 2 -ஆவது நாளாக மாவட்டத்தில் பவானி, கவுந்தப்பாடி, வரட்டுப்பள்ளம், ஈரோடு, பெருந்துறை போன்ற பகுதிகளில் சாரல் மழை பெய்தது. ஈரோட்டில் நேற்று காலை முதல் மதியம் வரை சாரல் மழை தூறிக்கொண்டே இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை மி.மீட்டரில் வருமாறு:- பவானி - 6.6, கவுந்தப்பாடி - 6.2, வரட்டுப்பள்ளம் - 5.2, பெருந்துறை - 3, ஈரோடு - 3, அம்மாபேட்டை - 1.6

Top