logo

ஈரோட்டில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தம்

25/Nov/2020 06:50:54

ஈரோடு: நிவர் புயல் இன்று இரவு புதுச்சேரி கடலூர் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை விழுப்புரம் நாகை, செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு  அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த7  மாவட்டங்களில் போக்குவரத்து சேவை  நேற்று நிறுத்தப்பட்டது இதேபோல் வெளி மாவட்டங்களில் இருந்து இந்த 7 மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஈரோட்டில் இருந்து சென்னைக்கு செல்லும் பேருந்து  சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது ஈரோட்டில் இருந்து தினமும் இரவு இரண்டு சாதாரண  பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த பேருந்துகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கோவையில் இருந்து ஈரோடு வழியாக இயக்கப்பட்டு வந்த நான்கு அரசு விரைவு பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அதிகாரிகளிடம் இருந்தும் மறு உத்தரவு வந்ததும் மீண்டும் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் 


Top