logo
ஈரோட்டில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர்  குண்டர் சட்டத்தில் கைது

ஈரோட்டில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

18/Mar/2021 04:38:28

ஈரோடு மார்ச்:ஈரோட்டில் சென்ற மாதம் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர்  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவடடத்தில் நடைபெற்று வரும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்   ரவுடிகளான கலைச்செல்வன் , கணசேகரன் ஆகிய இருவரை கடந்த மாதம் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதில் வேட்டை ரவி , பத்மநாபன் , மதன் , குட்டச்சாக்கு , அழகிரி ஆகியோர் 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியரிடம் பரந்துரை செய்தார். 

அதன்படி  மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், பரிந்துரைக்கப்பட்ட  5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க  உத்தரவிட்டார். இந்தாண்டு மட்டும் இதுவரை 11 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது

Top