logo
விவசாயிகளின் விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஏஐடியுசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளின் விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஏஐடியுசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

20/Nov/2020 11:13:52

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை திலகர் திடலில்  ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் மத்தியில் ஆளும் பிஜேபிஅரசின் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் விரோதசட்டங்களைதிரும்பப்பெறவலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்தியில் ஆளும் பிஜேபி அரசு மக்களின் விரோத விவசாய விரோத தொழிலாளர் விரோத ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது எனவும் குறைந்தபட்ச பாதுகாப்புள்ள தொழிலாளர் சட்டங்களையும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாகமாற்றி அமைத்து கார்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக நிறைவேற்றி அமலாக்கி வருகிறது என்றும் மக்கள் வரிபணத்தில் நாட்டுமக்கள் நலனுக்காக உருவான பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் நிலையைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்,  நிர்வாகிகள் திருநாவுக்கரசு, எம்.என். ராமச்சந்திரன், சுந்தர்ராஜன், ரமேஷ், உலகநாதன், முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கை முழக்கமிட்டனர்.


Top