19/Nov/2020 06:40:39
ஈரோடு:மின் வாரியத்தில் தேர்வு செய்த 10,000 கேங்மேன் பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு சூரம்பட்டிவலசில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் சசிக்குமார் தலைமை வகித்தார்.மின் வாரியத்தில் 50,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும்.
மின் வாரியத்தில் தேர்வு செய்த 10,000 கேங்மேன் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். 2500-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப உதவியாளர் (TA) பணியிடங்களை நிரப்பிட வேண்டும். வாரியம் அறிவித்த 2900 கள உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 1300 கணக்கீட்டாளர் பணியிடத்தை நிரப்பிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.