19/Nov/2020 06:45:12
ஈரோடு: முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தியின் 103-ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி. ரவி தலைமை வகித்தார். மண்டல தலைவர் ஜாபர் சாதிக் முன்னிலை வகித்தார். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், விவசாய பிரிவு பெரியசாமி, சேவா தள தலைவர் ஆறுமுகம், எஸ்.சி பிரிவு தலைவர் சின்னுசாமி, மனித உரிமைகள் துறை தலைவர் குமரேசன், மாநில எஸ்.சி. பிரிவு துணை தலைவர் ராஜேந்திரன்.
மாவட்ட துணை தலைவர்கள் பாஸ்கர் ராஜ், கோதண்டபாணி, மாவட்ட செயலாளர்கள் விஜயபாஸ்கர், கோபால், சீராஜ்தீன், விஜய்கண்ணா, சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி புவனேஸ்வரி இனிப்புகள் வழங்கினார்.
இதேபோல், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 103 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இந்திரா காந்தி படத்திற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி. ராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் .எம் .பழனிச்சாமி, குளூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் தளபதி ரமேஷ், துணைத் தலைவர் ஆரிப், மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் பயாஸ் அலி, மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் மகேந்திரன், சங்கர், புகழ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் சோலார் பகுதியில் உள்ள மேரி மாதா ஆதரவற்ற இல்ல குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.