logo
ஈரோட்டில் பெரிய வாய்க்காலில் மூழ்கி  பள்ளி  மாணவி சாவு: காப்பாற்ற சென்ற தந்தையும் பலி?

ஈரோட்டில் பெரிய வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவி சாவு: காப்பாற்ற சென்ற தந்தையும் பலி?

28/Feb/2021 07:02:20

ஈரோடு, பிப்:திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ரோடு, கதிர் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் செல்வகணபதி (வயது 45). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி செல்வி (42). இவர்களுக்கு காயத்ரி (21), அனுஸ்ரீ(17) என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் காயத்ரி திருப்பூரில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் மூன்றாமாண்டு படித்து வருகிறார். அனுஸ்ரீ திருப்பூரில் உள்ள மெட்ரிக் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.


இந்நிலையில், செல்வகணபதி தனது மனைவி, மகள்களுடன் சேலம் ஆத்தூரில் உள்ள உறவினர்  திருமணத்திற்காக  சென்றுள்ளார். திருமணத்தை முடித்துவிட்டு இன்று தனது ஆட்டோவில் செல்வகணபதி மனைவி, மகள்களுடன் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது நசியனூர் பெரிய வாய்க்கால் பகுதி அருகே வந்தபோது செல்வகணபதி மகள்கள் காயத்ரி ,அனுஸ்ரீ வாய்க்காலில் குளித்து விட்டு செல்லலாம் என்று கூறியுள்ளனர்.

 இதையடுத்து அனைவரும் வாய்க்காலில்  குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென காயத்ரி, அனுஸ்ரீ இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது அதே  வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த ஒருவர் காய்த்திரியை காப்பாற்றி விட்டார். இதையடுத்து செல்வகணபதி தனது இளைய மகள் அனுஷ்யா காப்பாற்ற வாய்க்காலில் நீந்தி சென்றார். அப்போது அவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். 

இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கும், பவானி தீயணைப்பு நிலைய வீரர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் அங்குள்ள பொதுமக்கள் உதவியுடன் வாக்கிய அலை அடித்துச் செல்லப்பட்ட செல்வகணபதி மற்றும் அனுஸ்ரீ யை தேடினர்.  இதில் வாய்க்காலின்   சிறிது தூரத்தில் அனுஸ்ரீ உடல் மீட்கப்பட்டது. 

ஆனால் செல்வகணபதி உடல் இன்னும் மீட்கப்படவில்லை.  தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் அனுஸ்ரீ உடல் பிரேத பரிசோதனைக் காக பெருந்துறை அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சித்தோடு  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Top