logo
புதுக்கோட்டை அருகே கூலித்தொழிலாளி கொலை? போலீஸார் விசாரணை

புதுக்கோட்டை அருகே கூலித்தொழிலாளி கொலை? போலீஸார் விசாரணை

13/Nov/2020 12:04:22

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உள்ள ஆனைவாரி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா மகன் வீரைய்யா (45). இவருக்கு மனைவி 3  குழந்தைகள் உள்ளனர். கூலித் தொழிலாளியான வீரைய்யா 11.11.2020 மாலை 6 மணி அளவில் தனது நண்பருடன் வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த மனைவி அக்கம்பக்கத்தினரிடம் வீரைய்யா பற்றி விசாரித்தாராம். 

இந்நிலையில், 12.11.2020 -அன்று காலை ஆனைவாரி அருகே உள்ள பாம்பாறு பகுதியில் வாயில் துணி கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வீரைய்யா மனைவி உறவினர்களுடன் சென்று பார்த்த போது இறந்து கிடப்பது வீரைய்யா என தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த கே.புதுப்பட்டி போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், வீரைய்யா உடன் சென்ற நண்பர் தலைமறைவாக உள்ளதால் அவரிடம் விசாரணை நடத்திய பின்பே கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில், போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் கொலையாளின் தடயங்களைத் ஆய்வு செய்தனர். போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் வீரைய்யாவுக்கு மதுப் பழக்கம் இருப்பதால் நண்பருடன் சேர்ந்து மது குடிக்கும்போது தகராறு ஏற்பட்டு கொலை நடந்திருக்கலாம் என தெரிவித்தனர். இது குறித்துகே புதுப்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து  வருகின்றனர்

Top