17/Nov/2020 09:25:02
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணை பகுதியில் உள்ள பழந்தோட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஒற்றை யானை இன்று இரவு நேரங்களில் வெளியேறி வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் இந்த ஒற்றை யானை பூங்கார் காலனிக்கு வருகிறது. இதனால் இந்த காலனி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது,ஒற்றை யானை இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து பூங்கார் காலனிக்கு வருவதால் இரவு நேரங்களில் இப்பகுதி மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒற்றை யானையை கண்காணிக்க இரவு நேரங்களில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றனர்.