logo
ஆலங்குடி அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவிகள் இருவர் பலி

ஆலங்குடி அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவிகள் இருவர் பலி

04/Dec/2020 05:13:57

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்து பள்ளி மாணவிகள்  2 பேர்  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  ஆலங்குடி கேவிஎஸ் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் மகள் ஸ்வேதா(13).ஆலங்குடியில் அரசு உதவிபெரும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த இவர், வெள்ளிக்கிழமை  வீட்டு மாடியில் விளையாடிக்கொண்டிருந்தபோது, மாடியின் அருகாமையில் சென்ற மின்கம்பியில் இருந்து எதிர்பாராத வி்தமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ஸ்வேதா சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றொரு சம்பவம்: ஆலங்குடி அருகேயுள்ள நம்பன்பட்டியைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் மகள் அஞ்சலி(16). ஆலங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பயின்றுவரும் இவர், வீட்டில் வெள்ளிக்கிழமை வேலைபார்த்துக்கொண்டிருந்தபோது, வீட்டு வாசலில் இருந்த எர்த் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளி மாணவிகள் இருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆலங்குடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

(படம்:உயிரிழந்த அஞ்சலி)


Top