logo
கஸ்தூர்பா காந்தி  மருத்துவமனையில் நேரிட்ட தீவிபத்தில் நோயாளிகளைக் காப்பாற்றிய  செவிலியர் ஜெயக்குமாருக்கு முதல்வர் ஸ்டாலின்  பாராட்டு

கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் நேரிட்ட தீவிபத்தில் நோயாளிகளைக் காப்பாற்றிய செவிலியர் ஜெயக்குமாருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

05/Jun/2021 01:14:52

சென்னை, ஜூன்: சென்னை, திருவல்லிக்கேணி, கஸ்தூர்பா காந்தி மகப்பேறு மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் கடந்த 26.5.2021 அன்று இரவு மின்கசிவு ஏற்பட்டு திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. அந்த அறையில் 36 பச்சிளங்குழந்தைகள் இன்குபேட்டரிலும் மற்றும் 11 குழந்தைகளுடன் தாய்மார்களும், என 47 நபர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.

தீ விபத்து ஏற்பட்டவுடன் அங்கு பணியில் இருந்த செவிலியர்ஜெயக்குமார்  ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, தீ அணைப் பான்களைப்பயன்படுத்தி  தீயை அணைத்தார். தீயணைப்புப் படைவீரர்கள் வரும் முன்னே, துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உயிர்களைக் காப்பாற்றினார்.

இந்நிகழ்வு குறித்து அறிந்த தமிழக முதல்வர் மு..ஸ்டாலின், செவிலியர்  ஜெயக்குமாரை  (5.6.2021) சனிக்கிழமை முகாம் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, அவரது செயலைப் பாராட்டி, சிறப்பு செய்தார்.

இந்தச் சந்திப்பின் போது, நீர்வளத் துறை அமைச்சர்  துரைமுருகன்இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்.உதயநிதி ஸ்டாலின், செவிலியர் ஜெயக்குமார், மனைவி செவிலியர் தேவிகா மற்றும் அவரது குழந்தைகள் உடனிருந்தனர்.

Top