logo
ஈஐடி பாரி தொழிலாளர்களுக்கு ரூ.1000 போனஸ்-சிஐடியு போராட்டம் வெற்றி

ஈஐடி பாரி தொழிலாளர்களுக்கு ரூ.1000 போனஸ்-சிஐடியு போராட்டம் வெற்றி

13/Nov/2020 09:06:12

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஊனையூரில் உள்ள ஈஐடி பாரி தொழிற்சாலை ஊழியர்களுக்கு சிஐடியுவின் கோரிக்கையை ஏற்று ரூ.1000 போனஸ் வழங்கி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஊனையூரில் உள்ள ஈஐடி பாரி ஊட்டச்சத்து மருந்து தொழிற்சாலையில் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு சட்டப்படியான கூலி வழங்காமல் குறைந்த அளவே வழங்கப்படுகிறது. இந்நிலையில், தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்கத்தில் இணைந்து சம்பளம், போனஸ் உள்ளிட்ட கோரிக்ககைளுக்காக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், சிஐடியு வின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டுவரை வெறும் ரூ.100 மட்டுமே வழங்கப்பட்டு வந்த தீபாவளி போனசை உயர்த்தி தற்பொழுது ரூ.1000 ஆலை நிர்வாகம் வழங்கியுள்ளது. இது சிஐடியுவின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

 


Top