logo

ஈரோட்டில் பெண் தீக்குளித்து தற்கொலை

08/Nov/2020 01:01:33

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த விஜய் மனைவி ரேவதி(42). துணி சலவை, அயர்ன் செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், ரேவதி அவரது மகன் சுபாஸ்(22) உடன் ஈரோடு அருகே உள்ள சோலாரில் வாடகை வீட்டில் குடியிருந்து, சலவை தொழில் செய்து செய்து வந்தனர். ரேவதிக்கு அதேபகுதியை சேர்ந்த சுப்பிரமணியுடன் பழக்கம் ஏற்பட்டு, சுபாஸ் இல்லாத நேரத்தில் ரேவதியின் வீட்டிற்கு சுப்பிரமணி வந்து சென்றுள்ளார்.

இதை அறிந்த சுபாஸ், அவரது அம்மாவை கண்டித்து சோலாரில் இருந்து வீட்டை காலி செய்து பவானிக்கு சென்று விட்டனர். இந்நிலையில், கடந்த 5-ஆம் தேதி, பவானியில் இருந்து ரேவதி சோலார் சென்று வருவதாக சுபாசிடம் கூறி சென்றார். சோலாரில் இருந்த சுப்பிரமணி, ரேவதியிடம் ஏன் வீட்டை காலி செய்கிறார் என பிரச்னை செய்துள்ளார். இதில், மனவேதனை அடைந்த ரேவதி சோலார் வசந்தம் நகர் பிரிவு அருகே டீசலை உடலில் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக்கொண்டார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ரேவதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

                                                                               

        


Top