logo
தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வலியுறுத்தி கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வலியுறுத்தி கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

29/Oct/2020 09:10:11

ஈரோடு : ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து ஒரே பெயரில் தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வலியுறுத்தி தமிழக முன்னேற்ற கழகம் சார்பில் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளன், பண்ணாடி, தேவேந்திர குலத்தான் உள்ளிட்ட ஏழு உட்பிரிவுகளை ஒன்றினைத்து தேவேந்திர வேளாளர் என்று அரசாணை பிறப்பிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கருப்புச்சடரடை அணிந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்போராட்டத்தின் 355 -ஆம் நாள் நிகழ்வாக கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் தமிழக முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டசெயலாளர் மயில்துரையன் தலைமையில்  மாவட்ட தலைவர் செல்வராஜ் முன்னிலையில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கருப்புச்சட்டை அணிந்து கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


Top