17/Jun/2021 07:00:17
ஈரோடு, ஜூன்: தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறப்பை கண்டித்து ஈரோட்டில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் 27 மாவட்டங்களில் கடந்த 15 -ஆம் தேதி முதல் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் கட்டுப்பாடுகளுடன் காலை முதல் மாலை வரை இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி பாட்டாளி
மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக்
கடை திறப்பு எதிர்ப்பு தெரிவித்து கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி
தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் அறிவித்திருந்தனர்.
அதன்படி, ஈரோடு மாநகர மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அந்தந்த பொறுப் பாளர்கள் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தா.ப.பரமேஸ்வரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய மாவட்ட செயலாளர் பிரபு, மாநில துணைத்தலைவர் எஸ்.எல். பரமசிவம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பொ.வை ஆறுமுகம், ராஜேந்திரன்,
அருள்மொழி, மாநகரச் செயலாளர் எஸ் .ஆர் .ராஜீ,மூர்த்தி கணேஷ்
கலந்து கொண்டனர்.
இதைப்போல் முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் ஆறுமுகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில இளைஞர் சங்க துணைச் செயலாளர் சிவன், மாநில இளைஞர் சங்க துணைத்தலைவர் விக்னேஷ்,
பொறுப்பாளர்கள் சதீஷ்
கொங்கு முருகன் மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மொடக்குறிச்சி, பெருந்துறை, பகுதியில் கிழக்கு
மாவட்ட செயலாளர் பி.டி.ராசு தலைமையில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மதுக்கடைகள் திறப்பை கண்டித்து விழிப்புணர்வு பதாகைகளுடன்
முழக்கமிட்டனர்..