23/Jun/2021 07:44:40
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை (110/ கேவி) சிப்காட் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் மின் பாதைகளில் அவசரகால பராமரிப்பு நடைபெற இருப்பதால் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பின் வரும் அந்தந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இது குறித்து புதுக்கோட்டை உதவி
செயற்பொறியாளர் ( இயக்குதல்
/ காத்தல் -கிராமியம்) எஸ்.கண்ணன் வெளியிட்ட தகவல் :
23.6.2023- இல் சிப்காட் நகர், சிப்காட் தொழிற்பேட்டை, சிட்கோ தொழிற்பேட்டை ரெங்கம்மாள சத்திரம்,
கே.கே.நகர், மாணிக்கம்பட்டி, வாகைப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
24.6.2021 -இல் வடசேரிப்பட்டி வாகவாசல் முள்ளூர், இச்சடி,
வடவாளம் புத்தாம்பூர் செம்பாட்டுர். கேடயப்பட்டி செட்டியாபட்டி ராயப்பட்டி, காயாம்பட்டி மேலக்காயாம்பட்டி வேப்பங்குடி ஆகிய பகுதிகளில் மின்தடை
ஏற்படும்.
25.6.2028 -இல் முத்துடையான்பட்டி
கீழமுத்துடையான்பட்டி, வெள்ளனூர், கிளியூர், மேலூர்,
அம்மன்பேட்டை, இரும்பாளி,
கூத்தினிப்பட்டி, உடையாண்டிபட்டி,
சித்தன்னவாசல் ஆகிய
இடங்களில்
மின்தடை ஏற்படும்.
28.6.2021 -இல் பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர்,
அபிராமிநகர், கவிதா நகர், வசந்தபுரி நகர்,
பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர், மச்சுவாடி ஜீவாநகர்,
சிட்கோ தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் காலை
10 மணிமுதல் மதியம் 1 மணிவரை மின்வினியோகம் இருக்காது. இந்த மின் தடைக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்
படுகிறார்கள்.