logo
 ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் 70 சதவீத  மாடுகள்   விற்பனை

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் 70 சதவீத மாடுகள் விற்பனை

29/Oct/2020 08:56:10

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் காவேரிக்கரை அருகில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இதன்படி, இன்று கூடிய மாட்டு சந்தையில், நேற்று இரவு முதலே ஈரோடு மட்டும் அல்லாது நாமக்கல், திருப்பூர், கரூர் உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டத்தில் இருந்து மாடுகள் வரத்தாக துவங்கியது.

மாடுகளை வாங்க தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற வெளிமாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனா். இதனால், சந்தைக்கு வந்த மொத்த  மாடுகளில், 70 சதவீதம் விற்பனையானது.

இதுகுறித்து மாட்டு சந்தை நிர்வாகிகள் கூறுகையில், இந்த வாரம் கூடிய சந்தையில் பசு-300, எருமை-100, கன்று-60 என 460 மாடுகள் கொண்டு வரப்பட்டன. இதில், கறவை மாடுகள் ரூ.30ஆயிரம் முதல் ரூ.65ஆயிரம் வரையும், கன்று ரூ.3ஆயிரம் முதல் ரூ.15ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் அடுத்த வாரம் மாடுகள் வரத்து சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம், என்றனர். 


Top