logo
திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து ஈரோடு மாநகர மாவட்ட அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து ஈரோடு மாநகர மாவட்ட அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

29/Mar/2021 08:03:45

ஈரோடு, மார்ச்: ஈரோடு மாநகர மாவட்ட அ.தி.மு.க சார்பில் திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து எம்.எல்.ஏ.க்கள் தலைமையில்கண்டன ஆர்ப்பாட்டம்  நடந்தது .



 தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க எம்.பி. ஆ. ராசா முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமியை அவதூறாக பேசியதை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.கவினர் சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி  ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே ஆ.ராசாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.வி. ராமலிங்கம் , கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள்ஆ. ராசாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் அவரை கைது செய்ய வலியுறுத்தி  முழக்கமிட்டனர். 

முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே .சி. பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஷ், கேசவமூர்த்தி,மாவட்டச் செயலாளர் ரத்தன் பிரித்வி,இணைச்செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதைப்போல் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் பகுதி செயலாளர்கள் கே சி பழனிச்சாமி, பெரியார் நகர் மனோகரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆ.ராசாவை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர். இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Top