03/Jun/2021 04:32:11
புதுக்கோட்டை, ஜூன்: முன்னாள் முதல்வர்
கருணாநிதியின் 98-ஆவது
பிறந்தநாளை
முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட
உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இங்குள்ள தலைவர் கலைஞர் சிலைக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன், எம்எல்ஏ- டாக்டர் வி. முத்துராஜா, நிர்வாகிகள் க.நைனாமுகமகு, எம்.எம். பாலு, ஆ. செந்தில், கே. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் 45 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில்...
இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், பணியாற்றும் ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உதவியாளர் களுக்கு வடக்கு மாவட்ட பொருப்பாளர் வழக்குரைஞர் கே,கே. செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை. முத்துராஜா, வடக்குமாவட்ட பொருளாளர் ஆ. செந்தில் ஆகியோர் மட்டன் பிரியாணி, இனிப்புகள் வழங்கினர்.
வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்து ராஜா ஆகியோர் கலந்து கொண்டு இல்லவாசிகளுக்கு பிரியாணி வழங்கினர். இதில், நிர்வாகிகள் எம்.எம். பாலு, ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தொமுச நிர்வாகி ரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொண்டைமான் நகர் பகுதியில்...
இப்பகுதியில் நடைபெற்ற திமுக தலைவர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நிர்வாகி இதயம்அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பூங்கா நகர் (அப்புஸ்கறி அருகில்)... மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் எஸ்விஆர்.ஸ்டாலின்ராஜா ஏற்பாட்டில் முன்கள பணியாளர்கள் 35 பேருக்கு அரிசி, மளிகை, காய்கறிகள் வழங்கப்பட்டது.
மலையப்பா நகரில்... மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் மணிமொழி மனோகரன் ஏற்பாட்டில் 100 குடும்பங்களுக்கு அரிசி மளிகை காய்கறிகள் வழங்கப்பட்டது. இதோ போல மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பூங்குடி ஊராட்சியில்....
மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி சார்பில் மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி அமைப்பாளர் மத்திய அரசு நோட்டரி பப்ளிக் வழக்குரைஞர் பூங்குடி சிவா தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். அருணாதேவி சிவக்குமார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், மாற்றுத்திறனாளிகள் ,ஊராட்சி பணியாளர்கள் காவல்துறை, நண்பர்கள், மருத்துவ பணியாளர்கள் ,பணித்தள பொறுப்பாளர்கள் ,மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது.
இதையொட்டி ஊராட்சி முழுவதும் பலவகையான மரக்கன்றுகள் நடப்பட்டது இதில் அன்னவாசல் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்