27/Oct/2020 10:57:18
ஈரோடு உப்புகிணறு பகுதியை சேர்ந்தவர் முகமது ரியாசுதீன் (42). இவர் சம்பவத்தன்று தனது நண்பர் தங்கராஜ் உடன் ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து பன்னீர்செல்வம் பார்க் செல்வதற்காக நகரப் பேருந்தில் ஏறினார். அப்போது அருகே ஒரு நபர் நின்று கொண்டிருந்த ஒரு நபர் திடீரென ரியாசுதீன் பையில் வைத்திருந்த ரூ.200 பணத்தை பறித்துக் கொண்டு ஓடியுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரியாசுதீன் கூச்சலிட்டார்.அந்த வழியாக வந்த பொதுமக்கள் தப்பியோடிய நபரை மடக்கிப் பிடித்து டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த நபர் பழைய காரை வீதியைச் சேர்ந்த மீராமைதீன் (38) என தெரியவந்தது. இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.