logo
விருது பெற்ற கவிஞர் தங்கம்மூர்த்திக்கு புதுக்கோட்டை பேலஸ் சிட்டி  ரோட்டரி சங்கத்தினர் பாராட்டு

விருது பெற்ற கவிஞர் தங்கம்மூர்த்திக்கு புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத்தினர் பாராட்டு

08/Jan/2021 05:36:03

புதுக்கோட்டை,ஜன:  புதுக்கோட்டைசரவணபவன் கூட்ட அரங்கில் நடந்த  நிகழ்ச்சிக்கு  சங்கதலைவர்  டாக்டர் பி.தனசேகரன் தலைமை வகித்தார்.முன்னாள் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி  முன்னிலை வகித்தார். செயலாளர் வி.என்.எஸ் செந்தில் அனைவரையும்  வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கம்பன் கழக செயலாளர் இரா .சம்பத்குமார் பேசியதாவது: ஒரு படைப்புக்கு தேர்வு செய்யும் சொற்கள்தான் மிக முக்கியம். அதுதான் அந்தப் படைப்பின் தரத்தை நிர்ணயிக்கிறது. ஒரு நல்ல புத்தகத்தை ரசித்துப் படிப்பவனுக்கு புத்துணர்ச்சியை    தருகிறது. அழகிய கவிதைகளை எளிய மொழியில் கவிஞர் தங்கம் மூர்த்தி படைத்திருக்கிறார். தான் சந்திக்கிற மனிதர்களை, பறவைகளை, விலங்குகளை, இயற்கையை தேவதைகளால் தேடப்படுபவன் என்கிற புத்தகத்தின் மூலம் அழகாக படம்பிடித்துக்காட்டுகிறார். 

இத்தொகுப்புக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் விருது வழங்கியிருப்பது மிகவும் பொருத்தமானது. இதுபோன்ற படைப்புகளை  தொடர்ந்து  வழங்க வேண்டும். பேலஸ் சிட்டி  ரோட்டரி சங்கம் பல்வேறு சமூக சேவைகளை  செய்து வருகின்றது மேலும்சிறந்த சமூக சேவைகளை செய்யவேண்டும்  என்றார்.

 கவிஞர் தங்கம்மூர்த்தியை பாராட்டி சங்கம் சார்பில் தலைவர்  டாக்டர் பி.தனசேகரன் சார்பில் நினைவு பரிசு வழங்கினார். நிறைவாக கவிஞர் தங்கம் மூர்த்தி  ஏற்புரையாற்றி னார். பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கமுன்னாள் தலைவர்கள் நிர்வாகிகள் வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேனிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.ஏற்பாடுகளை பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கநிர்வாகிகள்  சிறப்பாக செய்தனர். 

 


Top