13/Nov/2020 09:02:26
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட மாசு கட்டுபாட்டு வாரியம் சார்பில் விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வுவாகனம் கலைக்குழுவினர் பிரசார நிகழ்ச்சி புதுக்கோட்டையில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்டச் சுற்று சூழல்பொறியாளர் ஆர்.குணசேகரன் தலைமை வகித்தார் உதவிப்பொறியாளர் கே.செல்வக்குமார் வரவேற்றார். வட்டாரபோக்குவரத்து அலுவலர் சி.கே .ஜெயதேவராஜ் விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சார கலை நிகழ்ச்சியினை கொடியசைத்து தொடக்கி வைத்தார். பொதுமக்களிடம் கையேடுகளையும் வழங்கினார்.
கலைக்குழுவினரின் பிரச்சார கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மாசு கட்டுபாட்டு வாரிய பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உதவிப்பொறியாளர் ஜி.ராஜ ராஜேஸ்வரி நன்றி கூறினர். நகரில் நடந்த விழிப்புணர்வு பிரசார வாகன கலை நிகழ்ச்சியை பொது மக்கள் ஏராளமானோர் கண்டு களித்தனர்