logo
மன்னார்குடியில் நவ.1-இல் திருவாரூர், தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

மன்னார்குடியில் நவ.1-இல் திருவாரூர், தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

26/Oct/2020 07:07:56


சேலம்: இது குறித்து கோவில் பூசாரிகள் நல சங்க மாநிலத்தலைவர் பி. வாசு வெளியிட்ட அறிக்கை:


கோவில் பூசாரிகள் நல சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்து 16 -ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.இந்த சூழலில் திருவாரூர்,தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் கீழ்க்கண்ட தேதியில் நடைபெற உள்ளது நமது பூசாரிகளுக்கு அரசு அறிவிக்கப்பட்ட சலுகைகளுக்கு இதுவரை அரசாணை வெளியிடபடாமல் உள்ளது..இதனால் பூசாரிகள் ஓய்வூதியம் நலவாரியம்​ உள்ளிட்ட சலுகைகளை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது..


இதைப் பற்றி விவாதிக்கக் கூடிய வகையில் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் கீழ்க்கண்டவாறு நடைபெறுகிறது பொறுப்பாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து பொறுப்பாளர் கூட்டத்திற்கு கலந்து கொள்ள வேண்டுகிறோம்.இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.வாசு, மாநில பொருளாளர் கே. சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

இடம்- மன்னார்குடி சக்திவேல் முருகன் திருக்கோவில் வாளாகம் களவாகரை திருவாரூர் மாவட்டம்.நாள்- 1.11.2020- ஞாயிற்றுக்கிழமை, காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

 தொடர்புக்கு..  மாவட்ட தலைவர் டி.கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் பி.சேட்டு, மாவட்ட துணை தலைவர் என்.கலியமூர்த்தி,  தொலைபேசி எண்-  97860 57187.


Top