19/Oct/2020 11:27:04
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் யானைகள் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து கரும்புகளை எடுத்து உண்பது தினசரி வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த மக்னா யானை ஒன்று அவ்வழியாக வந்த லாரியை வழிமறித்து கரும்பு உள்ளதா என பார்த்ததால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதன் பிறகு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பட்டாசுகளை வெடித்து யானையை காட்டிற்குள் விரட்டினர் மீண்டும் நள்ளிரவில் இரண்டுமுறை காட்டைவிட்டு வெளியே வந்து யானை லாரிகளை வழிமறித்து லாரியில் உள்ள கயிற்றை அவிழ்க்க முயற்சித்த போது சிறிது நேரம் தும்பிக்கை மாட்டிக்கொண்டது. பிறகு தானாகவே தும்பிக்கையை எடுத்துக்கொண்டு, அனைத்து லாரிகளையும் ஒன்றன் பின் ஒன்றாக கரும்பு உள்ளதா என சோதனையில் ஈடுபட்டு லாரி ஓட்டுனர்களை அச்சத்தில் ஆழ்த்தியது.