logo
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு  ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள்  மனு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மனு

17/Dec/2020 07:50:40

ஈரோடு, டிச: ஈரோடு  ஆட்சியர்  அலுவலகத்தில்  நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திரண்டு வந்து   அங்கு வைக்கப்பட்டுள்ள கோரிக்கை பெட்டியில் தங்களது மனுக்களை போட்டனர். 

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கு சுயதொழில் செய்ய மானியத்துடன் கூடிய கடனுதவி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இலவசமாக வீடு கட்டித்தர வேண்டும். வீடு இருந்தும் வீடு மனை பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 4.40 சதவீதம் மேலுள்ள தண்டுவட மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையாக ரூ .1000 வழங்குபவர்களுக்கு ரூ. 1500 ஆக அதிகரித்து வழங்க நடவடிக்கை வேண்டும். மேலும் 100 நாள் வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவ்வாறு  அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Top