logo
பவானிசாகரில் இருந்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

பவானிசாகரில் இருந்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

16/Oct/2020 09:31:37

ஈரோடு:ஈரோடு -திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை ஆகும். 105 கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி  உள்ளது. 

நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு வரும்  நீர் வரத்து குறைந்துள்ளது. 

அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்கும், கீழ்பவானி வாய்க்காலுக்கும்  தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.  இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 99.69 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 2067 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து இதுவரை 800 கன அடி வீதம் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இன்று முதல் 950 கனஅடி வீதம் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதைப் போல் தொடர்ந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,300 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. 


Top