logo
ஈரோட்டில் அதிமுகவில் இணைந்த கொதேகவினருக்கு மேற்கு தொகுதி வேட்பாளர் உற்சாக வரவேற்பு

ஈரோட்டில் அதிமுகவில் இணைந்த கொதேகவினருக்கு மேற்கு தொகுதி வேட்பாளர் உற்சாக வரவேற்பு

03/Apr/2021 07:35:29

ஈரோடு, ஏப்: ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம்  கூரப்பாளை யம், பிச்சாண்டம்பாளையம் போன்ற பகுதியில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு  சேகரித்தார்.

அங்குள்ள வாக்காளர்களிடம், வேட்பாளர் ராமலிங்கம் பேசியதாவது:எனது தொகுதி வளர்ச்சி நிதியில் 50 சதவீதத்துக்கும் அதிகமான தொகை, கிராமப்பகுதியின் வளர்ச்சிக்காக செலவிட்டுள்ளேன். அதுபோல, ஒவ்வொரு கிராமப்பகுதியிலும் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், சத்துணவு மையம், சமுதாய கூடம், குடிநீருக்கான வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தந்துள்ளேன். வரும் காலங்களிலும் சிறந்த சேவையாற்ற, எனக்கு இரட்டை இலை சின்னத் தில்  வாக்களித்து  வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

பின்னர், கூரப்பாளையம் பகுதியை சேர்ந்த கொ.ம.தே.க வைச் சேர்ந்த  100-க்கும் மேற்பட்டோர்  குடும்பத்துடன்  மாநகர மாவட்ட அதிமுக செயலாளரும் மேற்கு தொகுதி வேட்பாளருமான  கே.வி.ராமலிங்கம் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத் துக்கொண்டனர். அனைவரையும் உற்சாகத்துடன் வரவேற்று  கட்சித் துண்டு, வேட்டி ஆகியவற்றை அணிவித்து, கட்சிப்பணியாற்றிட  அழைப்பு விடுத்தார்.இதை தொடர்ந்து, அப்பகுதியில் அவர்களும் இணைந்து இரட்டை இலை சின்னத்துக்கு  வாக்கு  சேகரித்தனர்.

Top