22/Dec/2020 02:12:19
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வாய்க்கால் மேட்டில் கார்த்தி என்பவருக்கு சொந்தமான வெங்கடேஸ்வரா கடலை எண்ணெய் மில் உள்ளது.இங்கு ஐம்பதுக்கு மேற்பட்ட நபர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
இன்று காலை 9 மணிக்கு மில்லில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது.இதனையடுத்து பெருந்துறை, ஈரோடு,சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 30 க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நான்கு வாகனங்கள் தீயை அணைக்க போராடிவருகின்றனர். பயங்கர தீ விபத்தால் ரூ 3 கோடி மதிப்பிவான எண்ணெய் மற்றும் இயந்திரங்கள் சேதம் அடைந்துள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.