logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் 200 இடங்களில் நவம்பர் புரட்சிதினக் கொடியேற்றவிழா

புதுக்கோட்டை மாவட்டத்தில் 200 இடங்களில் நவம்பர் புரட்சிதினக் கொடியேற்றவிழா

08/Nov/2020 03:15:36

புதுக்கோட்டை:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் 103-ஆவது நவம்பர் புரட்சிதினக் கொடியேற்றவிழா நடைபெற்றது.

கட்சியின் மாவட்டக்குழு அலுவகத்தில் செங்கொடியை மாவட்டக்குழு உறுப்பினர் எம்.அசோகன் ஏற்றி வைத்தார். நுகரச் செயலாளர் சி.அடைக்கலசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.முகமதலிஜின்னா, டி.சலோமி, சி.மாரிக்கண்ணு, எஸ்.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் புதுககோட்டை நகரத்தில் 10 இடங்களில் செங்கோடி ஏற்றப்பட்டது.

இதேபோல, அறந்தாங்கி, திருவரங்குளம், கறம்பக்குடி வடக்கு, கறம்பக்குடி தெற்கு கந்தர்வகோட்டை, குண்றாண்டார்கோவில், அன்னவாசல், விராலிமலை, பொன்னமராவதி, ஆவுடையாளர்கோவில், அரிமளம், மணமேல்குடி, புதுக்கோட்டை ஒன்றியம், திருமயம் ஆகிய ஒன்றியங்களில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் புரட்சிதினக் கொடியேற்றுவிழா நடைபெற்றது.

மேற்கண்ட கொடியேற்று நிகழ்ச்சிகளில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் க.செல்வராஜ், ஏ.ராமையன், எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், வி.துரைச்சந்திரன், சி.சுப்பிரமணியன், சி.அன்புமணவாளன், ஜி.நாகராஜன் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


Top