logo
தமிழக-கேரள எல்லையில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த  தமாக கோரிக்கை

தமிழக-கேரள எல்லையில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமாக கோரிக்கை

11/Oct/2020 12:18:24

ஈரோடு: தமிழக - கேரள எல்லைப்பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க - நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென தமிழ்மாநில காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணித்தலைவர் எம். யுவராஜா வெளியிட்ட அறிக்கை:.

இந்தியாவில் கொரோனா  தொற்று பரவலை சமாளிக்க கடந்த மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது  ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து  வருகிறது.

இந்தியாவில் கொரோனவை வேகமாக கட்டுப்படுத்திய மாநிலங்களில் கேரளாவும் ஒன்று என்று தமிழக எதிர்க்கட்சிகள் பாராட்டிவந்தன. ஆனால் தற்போது கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கேரள அரசு அங்கு கொரோனா  பரவலை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. கேரளாவில் சமூக பரவல்  அதிகமாக இருக்கின்ற காரணத்தால் கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வாழ்வாதாரம் வேண்டி   வரக்கூடிய மக்கள் தமிழக-கேரள எல்லை பகுதிகளில்  அதிகரித்து காணப்படுகின்றனர்.

தமிழகத்தில் அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கையால் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதுடன் இறப்பு விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனவை கட்டுக்குள் வைத்திருக்கும் தமிழகத்தில்  அதிக பரவல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே  தமிழக அரசு உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமாகா இளைஞரணி சார்பாக கேட்டுக்கொள்வதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.


Top