logo
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

11/Oct/2020 11:56:29

தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-ஆவது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்களில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.

 105 அடி  கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. நேற்று நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. நேற்று இரவு முதல் மழை பொழிவு குறைந்ததால் அணைக்கு வரும் நீர்வரத்தும் குறைந்தது.இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 100.33 அடியாக உள்ளது.

அணைக்கு வினாடிக்கு 1956 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக  தொடர்ந்து 850 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

நேற்று இரவு முதல் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.அதே நேரத்தில் கீழ்பவானி பாசனத்திற்காக 2300 கன அடி நிதம் தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.அணைக்கு நீர்வரத்து காட்டிலும் திறப்பு அதிகளவில் உள்ளதால் அணையின் நீர்மட்டம்  குறைந்து வருகிறது

Top